சென்னை:
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியையும் வென்று இந்திய அணி சாதனை படைத்தது.
சென்னையில் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 477 ரன்கள் எடுத்தது, பின்னர் முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி, கடைசி நாளான இன்று 207 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. ஜடேஜா 7 விக்கெட் எடுத்து சாதித்தார்.
இதன் மூலம் இந்திய அணி, ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 75 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்தத் தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வென்றது.



