பெத்தநாடார்பட்டியில் கால்நடை மருத்துவமனை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்

Published:

கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட பெத்தநாடார்பட்டி நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் தத்தெடுத்த முன்மாதிரி கிராமாகும் இந்த முன்மாதிரி கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் எனபதே இதன் நோக்கம் இதையடுத்து முதற்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்கபட்டது , இந்நிலையில் தமிழக அரசால் 100 கால்நடை கிளைநிலயங்கள் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவித்தது இதையடுத்து பெத்தநாடார்பட்டியில் செயல்பட்டு வந்த கால்நடை கிளை நிலையம் முழு நேர மருத்துவமனையாக செயல்பாட்டுக்கு வந்தது இந்த மருத்துவமனை மற்றும் மருந்தகத்தை கே.ஆர்.பி .பிரபாகரன் எம்.பி திறந்துவைத்தார் ,மேலும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையிடம் இருந்து புதிய மருத்துவமனை அமைக்க ரூ.26 லட்சம் நிதி பெற்று தந்துள்ளார் அதி நவீன வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தினை கால்நடை மண்டல இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் முருகையா ஆகியோருடன் சென்று பார்வையிட்டார்
பின்னர் அப்பகுதி விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை வைப்பதற்கு மானியத் தொகை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு கால்நடை மண்டல இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் முருகையா, கால்நடை மருத்துவர் நாகராஜன், கால்நடை ஆய்வாளர் டெய்சி ராணி, பெத்தநாடார்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ராதா, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மு.சேர்மபாண்டி ,மேலவைப் பிரதிநிதி ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img