December 5, 2025, 9:27 PM
26.6 C
Chennai

மெட்ரோ ரயில்: விடுமுறை நாட்களில்

metro - 2025

மெட்ரோ ரயில்களில் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஷேர் ஆட்டோ, டாக்ஸிகள் இயக்கம், கலை மற்றும் கண்காட்சிகள், உணவு திருவிழாக்கள், மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால், அலுவலக நாட்களில் மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை சராசரியாக ஒரு லட்சமாக இருந்தது. ஆனால், விடுமுறை நாட்களில் 50 சதவீதம், பயணிகள் எண்ணிக்கை குறைந்திருந்தது.

இதற்கிடையே, ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டணம் குறைப்பு என தீபாவளி பண்டிகையின்போது மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ”ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகை திட்டம் பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அலுவலக நாட்களில் தினசரி பயணிகள் எண்ணிக்கை அதிகபட்சமாக 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தமிழக அரசு இதுபோன்ற தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

மற்றொருபுறம் மாநகரங்களில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும், மெட்ரோ ரயில் திட்டங்களை விரிவாக்க மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

சென்னையில் பயணிகள் காற்று மாசற்ற பயணத்தை மேற்கொள்ள மெட்ரோ ரயில்களை பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் விரைவாக பயணம் செய்ய சென்னை மக்கள் மெட்ரோ ரயில் வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகையும் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories