மெட்ரோ ரயில்: விடுமுறை நாட்களில்

metro - 2026

மெட்ரோ ரயில்களில் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஷேர் ஆட்டோ, டாக்ஸிகள் இயக்கம், கலை மற்றும் கண்காட்சிகள், உணவு திருவிழாக்கள், மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால், அலுவலக நாட்களில் மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை சராசரியாக ஒரு லட்சமாக இருந்தது. ஆனால், விடுமுறை நாட்களில் 50 சதவீதம், பயணிகள் எண்ணிக்கை குறைந்திருந்தது.

இதற்கிடையே, ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டணம் குறைப்பு என தீபாவளி பண்டிகையின்போது மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ”ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகை திட்டம் பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அலுவலக நாட்களில் தினசரி பயணிகள் எண்ணிக்கை அதிகபட்சமாக 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தமிழக அரசு இதுபோன்ற தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

மற்றொருபுறம் மாநகரங்களில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும், மெட்ரோ ரயில் திட்டங்களை விரிவாக்க மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

சென்னையில் பயணிகள் காற்று மாசற்ற பயணத்தை மேற்கொள்ள மெட்ரோ ரயில்களை பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் விரைவாக பயணம் செய்ய சென்னை மக்கள் மெட்ரோ ரயில் வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகையும் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories