தமிழக உள்துறை செயலராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலராக இருந்த நிரஞ்சன் மார்டி இன்று பணி ஓய்வு பெறுகிறார். இந் நிலையில் அவருக்கு பதிலாக, எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் நெடுஞ்சாலை முதன்மைச் செயலராக உள்ளார். இதற்கு முன் அவர் பொதுப்பணித்துறைச் செயலராக பணியாற்றி உள்ளார். தற்போது உள்துறைச் செயலராக இடம் மாற்றப் பட்டுள்ளார்.