கரூர்: கரூரை அடுத்த புலியூரில் வேன் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் சென்றது. அந்தப் பேருந்து சித்தலவாய் கிராமத்தை அடுத்த பொய்கை புதூர் அருகே வந்தபோது, எதிரே வந்த லோடு வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயம் அடைந்த அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் அருகே வேன் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்து: 3 பேர் பலி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari