மார்கழி மாதத்தில், இப்போது கோலப் போட்டியைக் கையில் எடுத்திருக்கிறது பாஜக.,!
திமுக.,வினரின் கோல உத்திக்கு பதில் தரும் வகையில், வீட்டு வாசல்கள் தோறும் கோலம் வரைந்து, அதில் திமுக.,வின் தகிடுதத்தங்கள் குறித்து எழுதிவைத்து, தெருவில் போவோர் வருவோர் கவனத்தைக் கவரவும், பிரசாரம் செய்யவும் களம் இறங்கியிருக்கிறது பாஜக.,!
பாஜக., இவ்வாறு செயல்படுவதற்கான யோசனையைக் கொடுத்தவர், திமுக.,வின் தற்போதைய ஐ.டி. பிரிவு அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் எனும் வடக்கத்தி பார்ப்பனர் என்று சமூகத் தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
திமுக.,வினரின் கோலங்களுக்கு பதிலடியாக பாஜக.,வினரும் இப்போது கோலங்களை வரைந்து கருத்துகளை எழுதி வருகின்றனர்.