வழக்கம்போல்… எதிர்க்கட்சித் தலைவரின் ‘அரிய’ கடமையாற்றிய ஸ்டாலின்! திமுக., வெளிநடப்பு!

stalin out assembly2 - 2026
file picture

இன்று காலை தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளிலேயே முத்தாய்ப்பாக தனது வழக்கமான எதிர்க்கட்சித் தலைவரின் பணியைத் திறம்பட ஆற்றி வரலாற்றில் இடம் பிடித்த மு.க.ஸ்டாலின், ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். இதை அடுத்து திமுக.,வினர் அவையில் இருந்து வழக்கம் போல் வெளிநடப்பு செய்தனர்.

2020ஆம் ஆண்டின் தமிழக சட்டசபையில் முதல் கூட்டத்தொடர், இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. அப்போது குறுக்கிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், ஆளுநர் உரையின் போது அவர் பேச அனுமதி அளிக்கப்படாததால் திமுக.,வினர் வெளிநடப்பு செய்தனர்.

banwarilal purohit - 2026

தமிழில் வணக்கம், புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமது உரையைத் தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏதோ பேச முயன்றார். ஆனால் ஸ்டாலினின் அந்த அநாகரிகச் செயலுக்கும் மதிப்பளித்து பதில் அளித்த ஆளுநர் புரோஹித், பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க மட்டுமே சட்டசபையை பயன்படுத்துங்கள் என்று அறிவுரை கூறினார்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இவ்வாறு கூறியதைத் தாங்கமாட்டாத சுயமரியாதை மிக்க திமுக.,வினர் தொடர்ந்து தாங்கள் முன்னமேயே திட்டமிட்டபடி, வழக்கம் போல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

திமுக.,வினர் அவையில் இருந்து வெளியேறிய பின்னர் தமது உரையைத் தொடர்ந்த ஆளுநர் புரோஹித், தமிழகம் அமைதியான மாநிலமாகத் திகழ முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் சிறப்பாக செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்கு தமிழக போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் என்றும், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் அமைதியான முறையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்றும், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்…

  • ஜிஎஸ்டி இழப்பீடாக இந்த ஆண்டு தமிழகத்துக்கு ரூ.7000 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது.
  • ரூ.563.30 கோடி மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்காக மத்திய அரசு அளித்துள்ளது
  • பரம்பிக்குளம் – ஆழியாறு பிரச்னையை தீர்க்க தமிழக-கேரள முதல்வர்கள் சந்தித்து பேசியது பாராட்டுக்குரியது.
  • தமிழக அரசின் ஒப்புதல் இன்றி பெண்ணையாற்று படுகையில் கர்நாடகா அணை அமைக்க முடியாது.
  • கர்நாடகா, காவிரியின் குறுக்கே எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
  • முதல்வரின் கோரிக்கையை ஏற்று சரியான நேரத்தில் ஆந்திர முதல்வர் கிருஷ்ணா நதி நீரை திறந்து விட்டதற்கு நன்றி.
  • இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.,யில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • ஜெயலலிதாவிற்கு மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவிட பணிகள் விரைவில் முடிவடையும்.
  • சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.
  • புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் அரசின் நலத்திட்டப் பணிகளை மக்கள் எளிதில் பெற முடியும் …
ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

என்று உரையாற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories