December 6, 2025, 6:07 PM
26.8 C
Chennai

கரோனா வைரஸ்: நெல்லையில் சிறப்பு வார்டு திறப்பு!

nellai karona - 2025

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.

இங்கு 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவ குழு கண்காணிப்பில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த வைரஸ் தொற்று குறித்த அச்சம் உலகம் முழுக்க ஏற்பட்டிருக்கிறது.

பல்வேறு நாடுகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கேரளத்தைச் சேர்ந்த மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் விழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தேவையான உபகரணங்கள், மருந்துப் பொருட்களுடன் சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருநெல்வேலியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் காய்ச்சல் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் கூறியதாவது:

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் பெரியவர்களுக்கு 12, சிறியவர்களுக்கு 2 படுக்கை வசதிகளும், செயற்கை சுவாசம் அளிக்கும் வெண்டிலேட்டர், போதுமான ஆக்ஸிஜன், முக கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் தேவையான மருந்துகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு 24 மணிநேரமும் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்க ஏதுவாக 3 மருத்துவர்கள் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவர் குழுவில் சிறப்பு மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வரையில் கரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கும் யாருக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

தொடர் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், தொண்டை வலி, மிகுந்த உடல்வலி, உடல் சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, குளிர், நடுக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை உடனே அணுக வேண்டும்.

தும்மல், இருமல், சுகாதாரமற்ற கைகளால் தொடுதல் போன்றவற்றால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவும். இந்த வைரஸ் பரவாமல் காத்துக்கொள்ள, அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண், வாய், மூக்கு போன்ற பகுதிகளை அசுத்தமான கைகளோடு தொடாமல் இருக்க வேண்டும்.

காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்க வேண்டும். கரோனா வைரஸ் காய்ச்சல் காலங்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories