கணவனை கூலிப்படை வைத்து ஓட ஓட விரட்டி கொலை செய்த மனைவி!

usuf

தஞ்சாவூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் 45 வயதான யூசுப். தாய், தந்தையை இழந்த இவர் குவைத் நாட்டில் ஷாப்பிங் காம்பளக்ஸ் ஒன்றில் சூப்பரவைசராக பணியாற்றி வந்தார்.

அங்கு தன்னைப்போலவே தாய், தந்தையை இழந்து தனியாக வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 40 வயதான அசிலா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

கை நிறைய சம்பாதித்த இருவரும் குவைத்தில் இருந்து தஞ்சை வந்து, அப்பார்ட்மெண்ட் வீடுகள், விவசாய பண்ணை என சொத்துக்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 25 ஆம் தேதி வல்லம் அருகே நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த யூசுப்பை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது.

தஞ்சை, திருச்சியில் என 2 மனைவிகளையும் ஆளுக்கு ஒரு வீடு தந்து தங்க வைத்து யூசுப் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வல்லம் பிரிட்ஜ் மீது யூசுப் காரில் சென்று கொண்டிருந்தபோது, சில மர்ம நபர்கள் காரை மறித்து, காருக்குள் இருந்த யூசுப்பை வெளியே இழுத்து வெட்டி உள்ளனர்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை ஆரம்பித்தனர்..

தனிப்பட்ட முறையில் அசிலாவின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.. 2வதாக கல்யாணம் செய்து கொண்டு தஞ்சாவூரில் அசிலாவை விட்டுவிட்டு, திரும்பவும் யூசுப் குவைத் போய்விட்டாராம்.

அதாவது 2016-ம் ஆண்டு அவர் குவைத் போனதுமே, அசிலாவுக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் பழக்கமானார்கள். அவர்களை வீட்டுக்கே வரவழைத்து பல சமயங்களில் ஜாலியாக இருந்துள்ளார். யூசுப் அக்கவுண்ட் வைத்திருந்த பேங்க் மேனேஜரையும் வலையில் வீழ்த்தி , லாக்கரில் இருந்த 300 சவரன் நகை, கோடிக்கணக்கான சொத்துக்களை தன் பெயருக்கும் மாற்றிக் கொண்டார்.

usuf wife

இவ்வளவும் 2018-ல்தான் யூசுப்புக்கு தெரியவந்துள்ளது. அசிலாவின் தவறான நடவடிக்கையை யூசுப் கண்டித்துள்ளார். அப்போதிருந்துதான் தம்பதிக்குள் பிரச்சனை வெடித்துள்ளது. யூசப் குவைத்தில் இருந்து வந்து, வங்கி மேனேஜர், மனைவி அசிலா ஆகிய 2 பேர் மீது, தஞ்சாவூர் தாலுக்கா போலீசில் புகார் அளித்தார்.

இதில் அசிலா கைதாகி ஜெயிலுக்கும் போய் திரும்பவும் வெளியே வந்து அதன்பிறகு, அசிலா குழந்தைகளுடன் திருச்சி சென்று அங்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

அசிலா வீட்டை விட்டு சென்ற நிலையில், யூசுப் சொத்துக்களை விற்று பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த அசிலா, யூசுப்பை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். யூசுப் இறந்தால் சொத்துக்கள் அனைத்தும் தனக்கு வந்துவிடும் என சிலர் வழங்கிய ஆலோசனை பேரில் சதித் திட்டம் தீட்டியுள்ளார்.

கணவன் இல்லாததால் அசிலாவும், மனைவி இல்லாததால் யூசுப்பும் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.

ஏகப்பட்ட பாய் பிரண்டுகளை வீட்டுக்கு வரவழைத்து அசிலா ஜாலியாக இருந்துள்ளார். அதேபோல, யூசுப் சொத்துக்களை விற்று பல பெண்களுடன் ஜாலியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது..இது தான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதனால்தான் கொலை செய்ய கூலிப்படையை ஏவினாராம். அதற்காக தஞ்சாவூரில் அந்த கூலிப்படை கும்பலுக்கு 2 லட்சம் ரூபாய் தந்துள்ளர் அசிலா. ஆனால் அவர்கள் யூசுப்பை அப்போது கொல்லவில்லை.

அதனால், திருச்சியில் உள்ள கூலிப்படை கும்பலிடம் 15 லட்சம் ரூபாய் தருவதாக சொல்லி மறுபடியம் யூசுப்பை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் அசிலா..
2வது முறை முயற்சியில்தான், கடந்த 25ம் தேதி காரில் சென்றுக்கொண்டிருந்த யூசுப்பை, பைக்கில் 6 பேர் வந்து வழிமறித்து அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு சென்றனர்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இதையடுத்துதான், யூசுப் வீடு, அந்த சாலையில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், திருச்சியை சேர்ந்த கூலிப்படையான சகாதேவன் 26, அவரது நண்பன் பிரகாஷ் 25 ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான், அசிலா சிக்கினார்.. இவருடன் சகாதேவன்,பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து தற்போது விசாரித்து வருகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories