திருச்சி: அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க எண்ணி தங்கக் கட்டிகளை விழுங்கிய நபருக்கு வாழைப்பழங்கள் கொடுகப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று மலேசியாவில் இருந்து வந்த தனியார் விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்தார் ஒருவர். திருச்சி ஆழ்வார்தோப்பைச் சேர்ந்த அப்துல் வகாப் (55) என்ற அவரைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர் மீது சந்தேகம் வலுத்ததால், அதிகாரிகள் அவரை நவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது அவர் வாய் வழியாக 15 தங்கக் கட்டிகளை விழுங்கியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து வயிற்றுக்குள் இருக்கும் தங்கக் கட்டிகளை வெளியில் எடுக்க முடிவு செய்த அதிகாரிகள், அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு வாழைப்பழம் அதிக அளவில் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தப்பிக்க எண்ணி தங்கக் கட்டிகளை விழுங்கி கடத்தியவருக்கு வாழைப்பழ சிகிச்சை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

