நாடாளுமன்ற கூட்டத் தொடரை மேலும் 2 நாட்கள் நீட்டிக்க ஆலோசனை

Published:

புது தில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மசோதாக்கள் சில நிறைவேற்றப் பட வேண்டியிருப்பதால், கூட்டத் தொடரை இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை இன்று காலை நிலக்கரி மற்றும் சுரங்க மசோதாக்கள் மீதான தேர்வுக் குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிலக்கரி மசோதா மீதான தேர்வுக் குழு அறிக்கை எந்த வித திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமலும் ஏற்கப்பட்டது. அதேநேரம், சுரங்க மசோதா மீதான தேர்வுக்குழு அறிக்கையில் 2 திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு ஏற்கப்பட்டது. ஆனால் மசோதாக்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியது குறித்து பிரச்னை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நிலக்கரி மற்றும் சுரங்க மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு வசதியாக பட்ஜெட் கூட்டத் தொடரை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், திரிணமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தள கட்சிகள் ஆதரவு இருப்பதால் மசோத்தாக்கள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img