அனிதா தற்கொலைக்கு காரணம் திமுக; இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும்: கிருஷ்ணசாமி

சென்னை:
அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்குக் காரணமாக அமைந்தவர் திமுக., முன்னாள் எம்.எல்.ஏ.,  அரியலூர் மாவட்டச் செயலாளர்  சிவசங்கர்தான். இதுகுறித்து சிபிஐ., விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

நீட் தேர்வு எழுதி அதில் தேர்வாகாமல் போனதால், நீட் தேர்வு தன்னுடைய மருத்துவ கனவைச் சிதைத்து விட்டது என்ற விரக்தி நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. அனிதாவின் மறைவு தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து காட்சி ஊடகங்கள் நடத்திய விவாதங்களில் பங்கேற்ற புதிய தமிழகம் கட்சித் தலைவரும் மருத்துவருமான டாக்டர் கிருஷ்ணசாமி வித்தியாசமான கருத்தைத் தெரிவித்தார். ஊடகங்கள் கருத்துகளைப் புகுத்துவதாகக் குற்றம்சாட்டினார். புதிய தலைமுறை விவாதத்தில் கார்த்திகைச் செல்வன், நீங்கள் எந்த அடிப்படையில் மருத்துவரானீர்கள் என்று கேட்டபோது, “நீங்கள் எந்த அடிப்படையில் ஊடகப் பணிக்கு வந்தீர்கள்?” என்று கேட்டார் கிருஷ்ணசாமி.

நியூஸ் 18 விவாதத்தில் குணசேகரன், ‘பாதிக்கப்பட்டவர் மீதே பழி போடுகிறீர்களே, மத்திய மாநில அரசுகள் நீட் குறித்து இறுதி வரை சரியான வழிகாட்டுதலை தரவில்லையே?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணசாமி, ‘நீங்கள் ஏன் இந்த விஷயத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்?” எனப் பதிலளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அனிதாவின் தற்கொலைக்கு அனுதாபம் தெரிவிக்கலாமே தவிர, அங்கீகாரம் அளிக்க முடியாது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஒரே வழிதான். அப்படியிருக்கும்போது, அனிதாவிற்கு மட்டும் தனி வழி கிடையாது. அனிதாவின் தற்கொலைக்கு நீட் தேர்வு மட்டுமே காரணமா என்று தெரியவில்லை. இறந்து போன நீட் போராளி அனிதா – வீடியோ தற்கொலைக்கான காரணம் தெரியாமலேயே அது வேறு ஒன்றோடு முடிச்சுப் போடப்படுகிறது” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீட் விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுவதாகவும், பாஜகவுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார். “தமிழக அரசியல் கட்சிகள் மாணவர்களை வைத்து அரசியல் நாடகம் நடத்துகிறார்கள். நீட் தேர்விற்கும் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்தில் இனிவரும் காலங்களில் நடிகர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாது” எனக் கூறியிருந்தார்.

[su_youtube url=”https://youtu.be/1YNXfZmz1-c” width=”720″ autoplay=”yes”]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories