கர்ப்பிணி மருமகளை அடித்து துன்புறுத்திய மாமியார்! காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட தாய்!

Screenshot_2020_0812_165106

கர்ப்பிணி மகளை கொடுமைப்படுத்திய மருமகன் குடும்பத்தினர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, காவல் நிலையம் முன்பு பெண்ணின் தாய் தனது மகள்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவில் வசித்து வருபவர் ஹேமபாரதி. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்னதாக அதே பகுதியினை சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து தனது குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்துள்ளார்.

தினேஷ் நகராட்சியில் ஒப்பந்த அடைப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். ஹேமபாரதி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினேஷ் மது அருந்திவிட்டு வந்து, வீட்டில் உள்ள ஹேமபாரதியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்

அடித்ததற்கு காரணம் கேட்டால் மாமியார் குடும்பத்தினரும் சேர்ந்து அடித்ததாகவும், தகாத வார்த்தைகளை பேசி வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாமியார் குடும்பத்தினர் தாக்கியதில் ஹேமபாரதி மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் தனது தாய் மல்லிகா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் கடந்த சில நாட்களாக எந்த நடவடிக்கையும் இல்லை என கூறி ஹேமபாரதி தனது தாய் மல்லிகாவுடன் இன்று அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சென்றுள்ளார். அங்கு காவல்நிலையத்தில் குடும்ப பிரச்சனை என்பதால் காவல் ஆய்வாளர் சமரசம் செய்துள்ளார்.

இதை ஏற்காத ஹேமபாரதியின் தாய் மல்லிகா தனது 17 மற்றும் 14 வயது மகள்களுடன் காவல்நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல்துறையினர் தினேஷ் மற்றும் அவரது சகோதரர், மாமியார் மீது வரதட்சணை கொடுமை பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories