ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கோயில் விழா தகராறில் வாலிபரை தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கருவானூர் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் விழா கடந்த 3ம் தேதி நடைபெற்றது. அப்போது, அர்சுனன் தபசு தெருக்கூத்து நிகழ்ச்சியில் அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் மகன் அரவிந்தன் (20) மற்றும் அவரது நண்பர் பெரிய கணக்கம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (18) உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருவானூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் 6 பேரும் விழாவில் பங்கேற்றனர். இவர்களுக்கும், அரவிந்தனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், கல்லாவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேரும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் மீது கடந்த 13ம் தேதி அரவிந்தன் கல்லாவி போலீசில் மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். அதில், திருவிழாவின்போது தன்னையும், நண்பர் தினேஷையும் தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோட்டாட்சியர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினர். இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து நேற்று தேவேந்திரன் (20) மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேரையும் கைது செய்து, ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Less than 1 min.Read
கோயில் விழா தகராறில் இளைஞர் வாயில் சிறுநீர் ஊற்றியதாக 6 பேர் கைது
Hot this week
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக

Topics
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

