ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கோயில் விழா தகராறில் வாலிபரை தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கருவானூர் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் விழா கடந்த 3ம் தேதி நடைபெற்றது. அப்போது, அர்சுனன் தபசு தெருக்கூத்து நிகழ்ச்சியில் அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் மகன் அரவிந்தன் (20) மற்றும் அவரது நண்பர் பெரிய கணக்கம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (18) உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருவானூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் 6 பேரும் விழாவில் பங்கேற்றனர். இவர்களுக்கும், அரவிந்தனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், கல்லாவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேரும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் மீது கடந்த 13ம் தேதி அரவிந்தன் கல்லாவி போலீசில் மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். அதில், திருவிழாவின்போது தன்னையும், நண்பர் தினேஷையும் தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோட்டாட்சியர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினர். இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து நேற்று தேவேந்திரன் (20) மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேரையும் கைது செய்து, ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
2 min.Read
கோயில் விழா தகராறில் இளைஞர் வாயில் சிறுநீர் ஊற்றியதாக 6 பேர் கைது
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!
இந்தியா தொடரை அநாயசமாக வென்றது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!
இந்தியா தொடரை அநாயசமாக வென்றது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.

