கோயில் விழா தகராறில் இளைஞர் வாயில் சிறுநீர் ஊற்றியதாக 6 பேர் கைது

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கோயில் விழா தகராறில் வாலிபரை தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கருவானூர் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் விழா கடந்த 3ம் தேதி நடைபெற்றது. அப்போது, அர்சுனன் தபசு தெருக்கூத்து நிகழ்ச்சியில் அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் மகன் அரவிந்தன் (20) மற்றும் அவரது நண்பர் பெரிய கணக்கம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (18) உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருவானூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் 6 பேரும் விழாவில் பங்கேற்றனர். இவர்களுக்கும், அரவிந்தனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், கல்லாவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேரும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் மீது கடந்த 13ம் தேதி அரவிந்தன் கல்லாவி போலீசில் மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். அதில், திருவிழாவின்போது தன்னையும், நண்பர் தினேஷையும் தாக்கி வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோட்டாட்சியர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினர். இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து நேற்று தேவேந்திரன் (20) மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேரையும் கைது செய்து, ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories