வாட்ஸ்-அப்பில் ப்ளஸ் 2 வினாத்தாள் அனுப்பிய ஆசிரியர்கள் 4 பேர் கைது

ஓசூர்: ஓசூரில், தேர்வு மைய அறையில் இருந்து பிளஸ் 2 வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியது தொடர்பாக 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 18-ந் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் மொத்தம் 20 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 19 பேர் தேர்வு எழுதினர். ஒரு மாணவர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில், தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த மையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மகேந்திரன், தான் வைத்திருந்த செல்போன் மூலம், வினாத்தாளை படம் எடுத்து ‘வாட்ஸ் அப்’ மூலம் மற்றொரு ஆசிரியரான உதயகுமாருக்கு அனுப்பினார். அப்போது, பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையத்துக்குள் வந்து மாணவர்களிடம் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, மைய கண்காணிப்பாளரான மகேந்திரனிடம் ஒருவர் சோதனை செய்தார். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் செல்போன் இருந்தது தெரியவந்தது. அதை அடுத்து, ஆசிரியர் மகேந்திரனின் செல்போனை அதிகாரிகள் வாங்கிப் பார்த்தனர். அதில் ‘வாட்ஸ் அப்’ மூலம், அப்போது தேர்வு நடந்து கொண்டிருந்த கணிதத்தேர்வின் வினாத்தாள் பிறருக்கு அனுப்பப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வாட்ஸ் அப் மூலம் தனக்கு வந்த வினாத்தாளை ஆசிரியர் உதயகுமார் மேலும் 2 ஆசிரியர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாளிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்களை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியதாக ஆசிரியர்கள் மகேந்திரன், உதயகுமார் மற்றும் கோவிந்தன், கார்த்திகேயன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் கோவிந்தன் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories