வருமான வரித்துறை புலனாய்வு இன்ஸ்பெக்டர் கொலை!

vikas

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விகாஷ் மீனா(31). இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் 2014ம் ஆண்டு முதல் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இவர் தனது மனைவி ஹேமலதாவுடன் கீழ்ப்பாக்கம் பராக்கா சாலையில் உள்ள வருமான வரித்துறை குடியிருப்பில் வசித்து வந்தார். திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே கொரோனா காரணமாக தனது மனைவி ஹேமலதாவை கடந்த மே மாதம் சொந்த ஊருக்கு அனுப்பி விட்டு, விகாஷ் மீனா தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

அதேநேரம், தான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர் யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரது வீட்டை வழக்கமாக கணேஷ் என்பவர் சுத்தம் செய்து வந்தார். அதன்படி கணேஷ் நேற்று காலை 10.30 மணிக்கு விகாஷ் மீனா வீட்டிற்கு வந்துள்ளார்.

வெகுநேரம் வீட்டின் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அறையில் முகத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தலைமை செயலகம் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி உதவி ஆய்வாளர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விகாஷ் மீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது வீட்டில் இருந்து செல்போன் மற்றும் லேப்டாப்பையும் கைப்பற்றினர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், விகாஷ் மீனா வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் என்பதால், அவர் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வழக்குகளின் விசாரணை அதிகாரியாக இருந்தார்.

இவர் தற்கொலை செய்யவில்லை. அறையில் விழுந்து கிடந்தார். அதேநேரம் அவரது வாய் மற்றும் கண் புருவத்தில் ரத்த காயங்கள் உள்ளது.

மேலும், அவரது முகத்தை யாரே மின்வயரால் இறுக்கியது போன்ற தடயம் உள்ளது. இதனால் விகாஷ் மீனாவை யாரோ கொலை செய்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இளம் வயது புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் என்பதால், அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு எந்த பிரச்னையும் கிடையாது என்று அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலையா அல்லது தற்கொலையா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories