7 வயது சிறுமி கொலை: பூசாரிக்கு 10 ஆண்டு சிறை

Published:

வேலூர்: வேலூரில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பூசாரிக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. வேலூர், குடியாத்தம் பிச்சனூரைச் சேர்ந்த குமார் (50) என்பவர் அங்குள்ள கோயிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார். கடந்த 2011ம் ஆண்டு, சாமி கும்பிட வந்த ஏழு வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார். இதை அடுத்து, குடியாத்தம் போலீசார் குமாரை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு, வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்துது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய நீதிபதி நசீர் அகமது, குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img