மோடி பொய்யான தகவலைக் கூறுகிறார்: இ.கம்யூ. குற்றச்சாட்டு

Published:

புதுச்சேரி: நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொய்யான தகவல் கூறிவருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாடு நாளை தொடங்குகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மக்கள் நலனே முக்கியம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, பெருநிறுவனங்களின் நலனுக்காக செயல்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம் வேளாண் நிலங்களை பறித்து பெருநிறுவனங்களுக்கு அளிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. விவசாயிகள் நலனுக்கு எதிரான சட்டத்தைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு இடதுசாரிகளுக்கு உள்ளது என சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img