January 25, 2025, 1:59 PM
28.7 C
Chennai

மாமனுக்கு பெண் பார்க்கச் சென்ற தாய்! தாத்தாவுடன் தனித்திருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை!

vankodumai
vankodumai

சென்னை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் 36 வயதான இளம்பெண் ஒருவர் வியாசர்பாடியில் இருக்கும் தனது சகோதரர் வீட்டிற்கு, 10 வயதான மகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

தனது சகோதரருக்கு பெண்பார்க்கும் நிகழ்விற்காக சகோதரருடன் வெளியே சென்ற அவர், சிறுமியை அவரது தந்தையிடம் விட்டு விட்டு சென்றிருக்கிறார்.

அவரது பெயர் டேவிட்(60). தனது மகள் வெளியே சென்றவுடன் சிறுமிக்கு டேவிட் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

சிறுமியின் தாய் வீடு திரும்பிய போது சிறுமி அழுது கொண்டே இருந்துள்ளார். அவரிடம் விசாரித்த போது, தாத்தா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார்.

ஆத்திரமடைந்த சிறுமியின் தாய், தனது தந்தை மீது எம்.கே.பி நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறும் காவல் நிலையத்தில் கோரியிருக்கிறார்.

ALSO READ:  செங்கோட்டையில் தாயின் மடியில் அறக்கட்டளை முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்!

இதையடுத்து, பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.