December 5, 2025, 10:32 PM
26.6 C
Chennai

என் பொண்ணுக்கு இது தான் தொழில்.. முகநூலில் காதல் வலை வீசி 6 ஆண்களை மணந்து நகை பணம் பறித்த ‘மர்ம’ பெண்!

rajabhunisha-1
rajabhunisha-1

தன்னை ஏமாற்றி நான்காவதாக திருமணம் செய்து கொண்டு பணம் நகைகளை திருடி சென்ற பெண் மீது நடவடிக்கை எடுக்க கூறி இளைஞர் ஒருவர் மனு அளித்துள்ளார்.

மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியைச் சேர்ந்தவர் பாலகுரு (26). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2018 நவம்பர் மாதம் பேஸ்புக் மூலம் மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த மீரா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவரும் தொடர்ந்து பழகி வந்ததில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து ஊர் ஊராக சுற்றி திரிந்துள்ளனர்.

பின்னர் 2019-ஆம் ஆண்டு மே மாதம் தன் பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி மீராவை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் ஆன சில மாதங்களுக்கு பின்னர் தான் தெரிய வந்துள்ளது அந்த பெண்ணின் பெயர் ராஜபுநிஷா, இவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரின் மகள்என்பவை. இருப்பினும் காதல் மோகத்தில் பாலகுரு இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லும் பாலகுருவிடம் வீட்டின் அருகில் உள்ளவர்கள் நீ இல்லாத நேரத்தில் வேறு ஆண்கள் வருகின்றனர் என தெரிவிக்க இது குறித்து பாலகுரு ராஜபுநிஷாவிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை எழுந்துள்ளது. அதன்பின் அந்த பெண்ணின் செல்போனை எடுத்து பார்த்த போது தான் அவருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சண்டையில் தன் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிய ராஜபுநிஷா மீண்டும் வரவில்லை. விசாரித்ததில் அந்த பெண் பாலகுருவை நான்காவதாக திருமணம் செய்து கொண்டதும், அவர் தற்போது திண்டுக்கல் பார்த்திபனுடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் பாலகுருவின் வீட்டில் இருந்த 1 பவுன் செயின் மற்றும் ரூ.70 ஆயிரத்தையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து ராஜபுநிஷாவின் தாய் மும்தாஜை தொடர்பு கொண்டு கேட்டபோது என் மகள் பணத்திற்காக பலபேரை திருமணம் செய்து கொள்வாள், நீ ஒதுங்கிக்கொள் என மிரட்டியுள்ளார். ராஜபுநிஷா பேஸ்புக் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு அதற்கு கமெண்ட் செய்யும் ஆண்களை தேர்வு செய்து வலைவீசி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து பாலகுரு மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரையிடம் பாலகுரு புகார் மனு அளித்துள்ளார். மனுவில் தன்னை போல் வேறு இளைஞர்கள் யாரும் இவர் வலையில் சிக்கிவிடக்கூடாது எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories