December 7, 2025, 1:07 AM
25.6 C
Chennai

17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! திமுக நிர்வாகி தலைமறைவு!

vankodumai - 2025

செம்பாக்கத்தில் தந்தையை இழந்து, தாய் மற்றும் சகோதரியுடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்த 17 வயதான சிறுமியை ஏழ்மையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

குடும்ப ஏழ்மையின் காரணமாக பிழைக்க வேலை தேடி வந்துள்ளார் இதனை அறிந்த தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க சமூக வலைதள பொறுப்பாளர் தனது அலுவலகத்தில் அந்த சிறுமிக்கு வேலை தருவதக ஆசை வார்த்தை காட்டி அந்த சிறுமியை ஏமாற்றியுள்ளார்.

குடும்ப ஏழ்மை குறையுமே என அங்கே வேலைக்கு சேர ஒப்புக்கொண்ட சிறுமியை வேலைக்கு சேர்ந்த நாள் முதல் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

dhanadekaran
dhanadekaran

மேலும் அந்த சிறுமிக்கு மது கொடுத்து அந்த மயக்கத்தில் இருக்கும் போது தனது நண்பர்களான கார்த்திக் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் பாலியல் வன்புணர்வு செய்ய வைத்துள்ளார்.

பின்பு சென்னை தாம்பரம் அடுத்த கௌரிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். கார்த்திக்கை நம்பிய அந்த சிறுமி அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார்.

தன்னிடம் காதல் வயப்பட்ட சிறுமியிடம் ஆசை வார்த்தைப் பேசி கார்த்திக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு சிறுமியை மிரட்டி அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

சிறுமியை தான் வீடியோ எடுத்து வைத்திருப்பது குறித்து கார்த்திக் தனது நண்பரான மணிகண்டனிடம் கூறியுள்ளார். அவரும் கார்த்திக்குடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இவ்வாறு தினமும் பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். உடனே பிரச்சனை ஆகிவிடும் என்று செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று 18 வயது ஆகிவிட்டது என பொய் கூறி அந்த சிறுமியின் கருவை கலைத்துள்ளார்.

அவர்கள் மூவரும் சிறுமியுடன் எடுத்துக்கொண்ட வீடியோக்களை காட்டி மிரட்டியும் வந்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டில் இருந்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இவ்வாறு தான் மட்டுமல்லாது தன் நண்பர்கள் மற்றும் தன்னுடன் சேர்ந்தவர்கள் என 30 பேரை அந்த சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள வைத்து அந்த சிறுமியை நாசமாக்கியுள்ளார்.

இதனையறிந்த அந்த ஏழை குடும்பத்தினர் தி.மு.க சமூக வலைதள பொறுப்பாளர் தனசேகரனை நியாயம் கேட்டுள்ளனர். தன் கட்சி மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் மிகவும் பயந்துபோய் அமைதியாக இருந்துவிட்டனர்.

இதனையறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என தி.மு.க சமூக வலைதள நிர்வாகி தனசேகரன் தன் அரசியல் செல்வாக்கு மூலம் அந்த ஏழை குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதை தொடர்ந்து அந்த குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்தப் புகாரின் பேரில் மணிகண்டனையும் கார்த்திக்கையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவான தனசேகரை தேடி வருகின்றனர். திமுக நிர்வாகியால் ஓராண்டுக்கு மேலாக சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories