December 6, 2025, 8:19 AM
23.8 C
Chennai

குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

orphanage
orphanage

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் 11 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணி புரியும் 3 பெண்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் கொரோனா சேவை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த குழந்தைகள் காப்பகத்தில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு‌ பணியாளருக்கும் சில நாட்களுக்கு முன்பிருந்தே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட அறிகுறிகள் தென்பட்டதாகவும் இதையடுத்து அவர்களுக்கு சோதனை செய்த போது கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் காப்பகத்தில் உள்ள பிற குழந்தைகளுக்கும் பணியாளர்களுக்கும் சோதனை செய்யப்பட்ட போது அவர்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து காப்பகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்த குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் அனுப்பி வைக்கும் பணியில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

14 குழந்தைகள் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டு பெற்றோர் இல்லாத 2 நிராதரவான குழந்தைகள் மட்டும் தொடர்ந்து காப்பகத்தில் தங்க வைக்கப்படுவர் என்றும் அவர்களை காப்பக பணியாளர்களே கவனித்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்று பல காப்பகங்கள் செயல்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான குழந்தைகளுக்கு பெற்றோர் இருக்கின்றனர்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, உணவு, உடை, கல்வி தருகிறோம் என்று ஆசை காட்டி காப்பகங்களில் தங்க வைத்து அவர்களை அனாதைகள் என்று இணையதளங்களில் விளம்பரப்படுத்தி வெளிநாடுகளில் இருந்து அளவுக்கு அதிகமாக நிதி பெறுவதை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது.

இதையடுத்து பெற்றோர் உள்ள குழந்தைகளை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories