குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

orphanage
orphanage

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் 11 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணி புரியும் 3 பெண்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் கொரோனா சேவை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த குழந்தைகள் காப்பகத்தில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு‌ பணியாளருக்கும் சில நாட்களுக்கு முன்பிருந்தே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட அறிகுறிகள் தென்பட்டதாகவும் இதையடுத்து அவர்களுக்கு சோதனை செய்த போது கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் காப்பகத்தில் உள்ள பிற குழந்தைகளுக்கும் பணியாளர்களுக்கும் சோதனை செய்யப்பட்ட போது அவர்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து காப்பகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்த குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் அனுப்பி வைக்கும் பணியில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

14 குழந்தைகள் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டு பெற்றோர் இல்லாத 2 நிராதரவான குழந்தைகள் மட்டும் தொடர்ந்து காப்பகத்தில் தங்க வைக்கப்படுவர் என்றும் அவர்களை காப்பக பணியாளர்களே கவனித்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்று பல காப்பகங்கள் செயல்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான குழந்தைகளுக்கு பெற்றோர் இருக்கின்றனர்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, உணவு, உடை, கல்வி தருகிறோம் என்று ஆசை காட்டி காப்பகங்களில் தங்க வைத்து அவர்களை அனாதைகள் என்று இணையதளங்களில் விளம்பரப்படுத்தி வெளிநாடுகளில் இருந்து அளவுக்கு அதிகமாக நிதி பெறுவதை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது.

இதையடுத்து பெற்றோர் உள்ள குழந்தைகளை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories