December 5, 2025, 11:31 PM
26.6 C
Chennai

கண்டனக் குரலா.. கண்துடைப்பா? ரத்தான லியோனி பதவியேற்பு விழா!

liyoni
liyoni

தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக லியோனி பதவியேற்கும் நிகழ்ச்சி, நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.

தமிழக பள்ளி கல்வி துறையின் துணை நிறுவனமாக செயல்படும், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், அரசின் பாட புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் நிர்வாக பணிகளை, மேலாண் இயக்குனர் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி மணிகண்டனும், உறுப்பினர் செயலர் பொறுப்பில் உள்ள இயக்குனர் நாகராஜ முருகனும் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், பாடநுால் கழக தலைவராக, தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் லியோனியை நியமித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. பதவியேற்கும் முன், அவர் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெண்களின் இடுப்பு மடிப்பு பற்றி பேசியவருக்கு, பள்ளி கல்வி பதவியா’ என, எதிர்ப்புகள் எழுந்தன.

நேற்று அமாவாசை நாள் என்பதால், காலை பதவியேற்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு, பாடநுால் கழக அலுவலகத்தில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், நேற்று மாலை வரை பதவியேற்க லியோனி வரவில்லை. வராததற்கான காரணமும், பாடநுால் கழகத்துக்கு, லியோனி தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

இதனால், அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். பெண்களை மதிக்கிற ஒருவரை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமிக்க வேண்டும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக லியோனி நியமிக்கப்பட்டிருப்பது, அந்த கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்து உள்ளது.

இதனால், அந்த கழகத்தின் தரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாக பேசுவது; அரசியல் கட்சி தலைவர்களை நா கூசும் வகையில் வசைபாடுவது; நாகரிகமற்ற, தவறான, ஒழுக்கமற்ற கருத்துகளை, மக்கள் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதை, வாடிக்கையாகக் கொண்டவர் லியோனி.

இவரை இந்தப் பதவியில் நியமிப்பதன் வழியே, தவறான கருத்துகள், மாணவ – மாணவியரிடம் எடுத்து செல்லப்படுவதோடு, அவர்களின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப் படும்.

எனவே, தமிழக மாணவ – மாணவியர் நலன் கருதி, நல்ல கருத்துகள் மாணவ – மாணவியரை சென்றடைய, இந்த நியமனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

பெண்களை மதிக்கிற ஒருவரை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories