December 6, 2025, 2:31 AM
26 C
Chennai

லாரியில் தேக்கு மரங்களை வெட்டி கடத்தல்! தப்பியோடியவர்களை தீவிர தேடல்!

Abduction - 2025

கோவை அருகே வனத்துறை அனுமதியின்றி தனியார் நிலத்தில் தேக்கு மரங்களை வெட்டிக்கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை புதூர் அருகே பட்டா நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை அனுமதியின்றி வெட்டி லாரியில் கடத்திச்செல்வதாக நேற்றிரவு ஓசை தொண்டு அமைப்பினருக்கும், மதுக்கரை வனத்துறையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றார்.அப்போது, மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 12-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்களை வெட்டி லாரியில் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதனை அடுத்து, அந்த லாரியை துரத்திச்சென்ற ஓசை அமைப்பினர் சிங்காநல்லூர் அருகே அதனை மடக்கிப்பிடித்தனர்.

அப்போது, லாரியில் இருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் தப்பியோடினர். தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்கள் கடத்திய லாரியை அதிரடியாக பறிமுதல் செய்து, மதுக்கரை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விவசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மேட்டுப்பாளையம் காட்டுராஜா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இவர் மீது ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் மரங்களை கடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, தப்பியோடிய காட்டுராஜா உள்ளிட்ட 2 பேரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories