இன்ஸ்டா மூலம்.. சிறுமிக்கு பாலியல் கொடுமை.. வீடியோவை வெளியிட்டு பணம் பறிப்பு!

santhosh
santhosh

காதல் வலையில் சிக்கிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள், வீடியோவை காட்டி 50 ஆயிரம் பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலமடை பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான சந்தோஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாணவியின் புகைப்படங்களுக்கு லைக் செய்வது, கமெண்ட் செய்வது என இருந்து வந்த சந்தோஷ்குமார், பின்னாளில் அவரை காதல் வலையில் வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவியின் ஆசையை தூண்டி நேரில் வரவழைத்த சந்தோஷ், தனது இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்து சென்று இருக்கிறான்.

தனிமையான இடத்தில் வைத்து மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நிலையில், இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறான். இதனை வைத்து மொத்தமாக ரூபாய் ஐம்பதாயிரம் வரை பணம் பறித்துள்ளான்.

மேலும், கூடுதல் பணத்தை கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததால் விரக்தி அடைந்த மாணவி செய்வதறியாது திகைக்க, பணம் வராததால் ஆத்திரமடைந்த சந்தோஷ் நெருக்கமாக இருந்த வீடியோவை தனது நண்பரான மதுரை மேலமாசி வீதி பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ராகுல் என்பவருக்கு அனுப்பி இன்ஸ்டாகிராம் மூலமாக பதிவு செய்ய வைத்துள்ளார்.

இந்த வீடியோவை காட்டி மாணவியிடம் பணம் கேட்ட நிலையில், இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் பதறியபடி தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் இன்ஸ்டாகிராம் கணக்கு வாயிலாக சந்தோஷ் மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமூக வலைதளங்களில் பெண்கள் இதுபோன்று நாடக காதல் வலையில் விழுந்தால் என்ன மாதிரியான விபரீதங்கள் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories