பிரபல எழுத்தாளர் கோவி மணிசேகரன் காலமானார்!

kovi manisekaran
kovi manisekaran

பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான கோவி.மணிசேகரன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 95.

வேலூர் மாவட்டம் சல்லிவன்பேட்டையில் 1927-ம் ஆண்டு மே 2-ம் தேதி கோவி.மணிசேகரன் பிறந்தார். தனது 16 வயது முதல் சுமார் 76 ஆண்டுகள் இலக்கியப் பணியாற்றி வந்த கோவி. மணிசேகரன் சென்னைகே.கே.நகரில் வசித்து வந்தார்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக தனது 95-ம் வயதில் அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.

கோவி.மணிசேகரன் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடகநூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்கள் மற்றும்ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

குறிப்பாக அவர் எழுதிய ‘குற்றாலக் குறிஞ்சி’ என்ற நூலுக்கு 1992-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

கோவி.மணிசேகரன் மறைவுக்கு ஸ்டாலின், தலைவர்கள், இலக்கியப் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரங்கல் செய்தியில், ‘சாகித்ய அகாடமி விருது பெற்ற மணிசேகரன், கே.பாலசந்தரிடம் 21ஆண்டுகளுக்கு மேலாக உதவி இயக்குநராக பணியாற்றி, 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் எழுத்து உலகத்துக்குப் பெருமையும் சேர்த்தவர்.

வரலாற்றுப் புதினமான குற்றாலக்குறிஞ்சியும், தென்னங்கீற்று திரைப்படமும் அவர் பெயரை இன்றும் சொல்லுகின்றன. தமிழ் எழுத்துலகம் மாபெரும் எழுத்தாளரை இழந்து தவிக்கிறது.’ என்று தெரிவித்துள்ளார்.

கோவி.மணிசேகரனின் இறுதிச் சடங்கு சென்னை ஏவிஎம் ஸ்டுடியோ அருகில் உள்ள மின் மயானத்தில் இன்று மதியம் நடைபெற உள்ளது. அவருக்கு சரஸ்வதி என்ற மனைவி, 5 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories