April 29, 2025, 12:47 AM
29.9 C
Chennai

இளைஞருக்கு வந்த வாட்ஸ்அப் வீடியோ கால்.. எச்சரிக்கும் சைபர் கிரைம்!

whatsapp
whatsapp

வாட்ஸ்அப் வீடியோ காலில் ஆபாசமாகத் தோன்றி பணம் கேட்டு மிரட்டும் வடமாநில கும்பல் குறித்துசென்னை பெருநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வினோத். இவரது முகநூல் மெசஞ்சரில் பெண் ஒருவர்’ஹாய்’ என மெசேஜ் அனுப்பியுள்ளார். பின்னர் அந்த பெண், தனது வாட்ஸ்அப் நம்பரைக் கொடுத்து உங்கள் வாட்ஸ் நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தால் என்னைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

வீடியோ காலில் வினோத் அழைக்க, அடுத்த நொடி, அழகியவட இந்திய பெண் ஒருவர் வாட்ஸ் அப் வீடியோ காலில் ஆபாசமாக அரைகுறை ஆடையுடன் தோன்றியுள்ளார். அதை வினோத் பார்த்து கொண்டிருந்தபோது, அழகியின் வீடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சில நிமிடங்கள் கடந்த நிலையில், அரைகுறை ஆடையுடன் நின்ற அந்த பெண்ணின் வீடியோவை வினோத் பார்த்துக் கொண்டிருப்பது போன்று ஸ்க்ரீன்சாட் போட்டோ, வினோத்தின் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து வினோத்திடம் பேசிய ஆண் ஒருவர், பெண்ணின் ஆபாச படத்தை ரசித்த தங்களின் சபலத்தை சமூகத்தில் அம்பலப்படுத்தட்டுமா…? என்று மிரட்டியும், சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என்று அச்சுறுத்தியும் வினோத்திடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பறித்துள்ளனர்.

ALSO READ:  ஹிந்து நம்பிக்கையை கேவலப் படுத்தியவர் அமைச்சராக தொடர லாயக்கற்றவர்!

மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீஸில் வினோத் புகார் அளித்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில், அது குஜராத்தைச் சேர்ந்தபெண் என்பதும், அரபித்தா குமாரி, அனாமிகா சர்மா என பலபெயர்களில் இந்த கும்பல் மோசடியை அரங்கேற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டஒரு கும்பல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில நாட்கள் இதுபோன்ற மோசடி புகார்கள் வருவது குறைந்தது.

இந்நிலையில் இதே பாணியில் மோசடிசெய்வது தற்போது அதிகரித்துள்ளது. இந்த கும்பலின் பிடியில்சிக்கியவர்களில் சிலர் வெளியேசொல்கின்றனர், பலர் ‘பணம் போனால் போகட்டும் மானமாவது மிஞ்சியதே’ என்று பணத்தை கொடுத்துவிட்டு தவிக்கின்றனர்.

இந்தியா முழுவதும் இந்தநூதன மோசடி அரங்கேறி வருகிறது. சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களை குறிவைத்து நடக்கின்ற இந்த மோசடியில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருங்கள் என சைபர் கிரைம் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Entertainment News

Popular Categories