இரட்டை தலையுடன் பிறந்த பசுங்கன்றை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது பசு மாடு ஒன்று ஆண் கன்று ஒன்றை ஈன்றது. ஆனால், இது இரட்டை தலை ஒற்றை உடலுடன் இருந்தது. இதனை ஏராளமானவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். வித்தியாசமாகப் பிறந்த அந்தக் கன்று நலமுடன் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.