ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு..

IMG 20221020 WA0137 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் கனமழை காரணமாக கிடுகிடுவென உயர்வு. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றம்..

தமிழகத்தில் பருவ மழை துவங்கி கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, மகாராஜாபுரம், தம்பிபட்டி, ராமச்சந்திராபுரம், கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஓடைகளின் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.

IMG 20221020 WA0138 - 2026

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான    பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம்   கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர் மழையின் காரணமாக 43 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வரத்தை பொறுத்து கூடுதலாக நீர் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று 41 அடி முழு கொள்ளவு கொண்ட கோயிலாறு அணையின் நீர்மட்டமும் 32 அடியை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளையும் நம்பியுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories