பாஜக நிர்வாகியை தாக்கிய நால்வர் கைது..

பாஜக நிர்வாகியை தாக்கிய நால்வர் கைது

500x300 1808906 3 - 2026

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் எதிரொலி- பாஜக நிர்வாகியை தாக்கியவர்கள் நால்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுராந்தகம் அருகே திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் துரை தனசேகரன் (வயது 46), பா.ஜனதா மாநில நிர்வாகி. இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து காரில் வெளியில் சென்றார். கானகோயில்பேட்டை என்ற பகுதியில் சென்ற போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். உடனே தனசேகரன் காரைவிட்டு இறங்கி ஓடினார். அப்போது அந்த கும்பல் அவரை துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த தனசேகரன் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தனசேகரனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சம்பவ இடத்துக்கு சென்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர் புடையவர்களை கைது செய்ய 4 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப் படுவார்கள் என்றார்.

இதற்கிடையே தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற தனசேகரனை சந்தித்து ஆறுதல் கூறினார். தைரியமாக இருங்கள். கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடுங்கள் என்றார்.

அதன்பிறகு அண்ணாமலை கூறுகையில், தனசேகரன் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கஞ்சா விற்பவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து அவர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட தமிழக பா.ஜனதா நிர்வாகி தனசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவரோடு தோளோடு தோள் நிற்பேன் என்ற வாக்குறுதியை அளித்தேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் தனசேகரன் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் நள்ளிரவு போலீசில் சரண் அடைந்தனர். விசாரணையில் அவர்கள் வக்கீல் அகமது பாஷா (வயது 33), மன்சூர் அலி (32), சையது அப்துல் ரகுமான்(20), இப்ராகிம் (35) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேரையும் இன்று காலை போலீசார் திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

https://www.maalaimalar.com/news/state/chairman-and-members-of-diaspora-tamils-welfare-board-appointed-chief-minister-mk-stalin-order-550695?infinitescroll=1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories