ஸ்ரீவி.,யில் பரபரப்பு-முதியவர் அடித்துக் கொலை. இருவர் கைது!

download - 2026

திருவில்லிபுத்தூரில் இன்று முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இருவரை போலீசார் கைதுசெய்தனர்.

திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது கூனங்களும் புதுத்தெரு அந்த பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து( 60) முதியவரான இவர் அவ்வப்போது பூ கட்டுவதும், கிடைத்த வேலையை செய்வதுமாக இருந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கோகுல் என்ற சிந்து(30), பேச்சிமுத்து (42) பேச்சிமுத்துவின் அண்ணன் மகன் கோகுல் இந்த இருவரும் அதிகாலை சுமார் 6.30 மணி அளவில் கூனங்குளம் புதுத்தெரு பகுதியில் வைத்து முதியவரான மாரிமுத்துவை சரமாரியாக தாக்கி உள்ளனர்.இதில் முதியவரான மாரிமுத்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இது பற்றி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்ற நகர் போலீசார் இறந்த மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாரிமுத்துவை தாக்கி கொலை செய்த கோகுல் என்ற சிந்துவையும் பேச்சு முத்துவையும் கைது செய்து நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட மாரிமுத்து மற்றும் கோகுல் என்ற சிந்து, பேச்சிமுத்து அனைவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .எப்போதும் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள கூனங்களும் புதுத்தெரு பகுதியில் வைத்து முதியவரை தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதற்கிடையே பேச்சிமுத்தும் கோகுல் என்ற சிந்துவும் எதற்காக மாரிமுத்துவை தாக்கி கொலை செய்தனர் என்பது குறித்து நகர் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories