நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் எழுத்தாளர் மீது தாக்குதல்!

கரூர்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் கண்மண் தெரியாமல் தாக்கிவிட்டனர் என்று எழுத்தாளர் முருகேசன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர், “பாலசந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு,’ என்ற புத்தகம் வெளியிட்டுள்ளார். புத்தகத்தில், புலியூரைச் சேர்ந்த ஒரு குறிப்பிட சமூகத்தை இழிவுபடுத்தியும், ஆபாசமாகவும் எழுதியுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், புலியூரில் இருந்த எழுத்தாளர் முருகேசனை, ஒரு கும்பல் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். கரூர் அரசு மருத்துவமனையில், போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெறும் எழுத்தாளர் முருகேசன் இது குறித்துக் கூறியபோது, வெள்ளப்பாறை ஆனைப்பட்டியை சேர்ந்த நான், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் புலியூர் வந்தேன். தற்போது, எல்.ஐ.சி., முகவராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த, 15 ஆண்டுக்கு முன் கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன். கடந்த, ஆறு ஆண்டுகளாக, “பாலசந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு,’ என்ற சிறுகதை புத்தகத்தைத் தொகுத்தேன். இதில், 13 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. “நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்,’ என்ற பகுதியில் ஒரு சமூகத்தை புண்படுத்தும் படி எழுதியிருப்பதாகக் கூறினர். யாரையும் புண்படுத்தும்படி நான் எழுதவில்லை. எந்த சமூகத்தைச் சார்ந்தவர்களையும் குறிப்பிடவில்லை. இருப்பினும், எனக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் மிரட்டல் விடுக்கப் பட்டது. அதனால், தவறாக எழுதி இருந்ததால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அப்பகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்களிடம் தெரிவித்தேன். இருப்பினும் ஒரு கும்பல் வீட்டிலிருந்த என்னைத் தாக்கியது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories