புது தில்லி: காஷ்மீர் மாநில முதல்வராக முப்தி முகமது சயீது வரும் மார்ச் 1 ஆம் தேதி பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. .தில்லி வந்த அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார் அப்போது அம்மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து பிரதமருடன் விவாதித்தார். இருவருடனான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இச்சந்திப்பின் போது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முப்தி அழைப்பு விடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது. முப்தியின் அமைச்சரவையில் 12 பா.ஜ.க. மந்திரிகளும், 13 பி.டி.பி. மந்திரிகளும் இடம்பெறலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முப்தி முகமது சையத் மார்ச் 1-ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார்: பிரதமரைச் சந்தித்த பின் தகவல்
Popular Categories


