நெல்லை: பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 61). ஓய்வுபெற்ற சிறப்பு எஸ.ஐ. இவருக்கு வள்ளிக்கண்ணு உள்ளிட்ட 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். . நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆறுமுகம் தனது ஒரு மகனை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு கொண்டு விட்டு காரில் வீட்டிற்கு திரும்பினார். பாளையங்கோட்டை செஞ்சிலுவை சங்க அலுவலகம் அருகே வரும்போது காரை வழிமறித்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். குடும்பத்தகராறு காரணமாக ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

