கோயிலில் பிரதமரை விமர்சித்து நோட்டீஸ் கொடுத்த அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை தேவை: ஹெச்.ராஜா

Published:

சென்னை:

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து நோட்டீஸ் கொடுத்த அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நோட்டீஸ் கொடுக்க அனுமதித்த கோயில் இணை ஆணையர் இடை நீக்கம் செய்யப் பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

திருச்செந்தூரில் கோவில் வளாகத்தில் பாரதப் பிரதமரை விமரிசித்து நோட்டீஸ் கொடுக்க அனுமதித்த கோவில் JC ஐ மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மகளிர் தினத்தன்று பாஜக மகளிர் நிர்வாகியை இழிவாக பேசி தாக்கிய அய்யாக்கண்னை காவல்துறை கைது செய்ய வேண்டும்

திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் அய்யக்கண்ணு வால் தாக்கப்பட்ட நெல்லை அம்மாள் அவர்கள் புகார் கொடுத்தும் FIR பதியாத காவல்துறை ஆய்வாளர் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மருத்துவ மனையில் சேர்கப்பட்டு அதற்கான மருத்துவ சான்றிதழ் தந்து் FIR பதியாத செயல் கண்டிக்கத்தக்கது – என்று கூறியுள்ளார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

முன்னதாக, நேற்று செந்தூர் கோயில் வளாகத்தில் அய்யாக்கண்ணு நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அதனை தடுத்து கேள்வி கேட்ட பெண் மீது கைகலப்பில் ஈடுபட்டனர் அய்யாக்கண்ணு குழுவினர். அந்த காணொளி (வீடியோ)…

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img