ஒளி கூடிய மின் விளக்குகளால் ஏர்வாடி பள்ளி மாணவர்களுக்கு கண் பாதிப்பு: ஆட்சியர் தகவல்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் தனியார் பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, கண்களை கூசச் செய்யும் மின்விளக்குகளின் வெளிச்சம் காரணமாக கண்களில் இருந்து நீர் வடிந்து, கண்கள் சிவந்தன. இதை அடுத்து, தனியார் கண் மருத்துவமனை மூலம் அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப் பட்டது.

அதிக அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகக் கருதப் பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. இதற்கு, இந்த ஆண்டு விழாவிற்காக பயன்படுத்தப் பட்ட சக்தி வாய்ந்த மின்விளக்குகளின் வெளிச்சம் தான் காரணம் என்று கூறப் பட்டது. விழா முடிந்த நிலையில், இன்று காலை தான் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு கண்ணில் வீக்கம், எரிச்சல் மற்றும் தண்ணீர் வந்துள்ளது. எனவே இது குறித்த புகாரின் பேரில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்த தகவல் பரவியதும், பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற பலரும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துதனர். முன்னதாக பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து சிகிச்சை அளித்த அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், மாணவர்களுக்கு லேசான பாதிப்புதான், அதிகளவில் பாதிப்பு இல்லை. இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினர்.

இதனிடையே, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, இது குறித்து விசாரிக்கப் படும் என்றும், எந்த வகையான விளக்குகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து அறிந்து, இனி வருங்காலத்தில் இது போன்ற விளக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு லேசானது தான், அவர்கள் உடனே சிகிச்சை முடிந்து அனுப்பி வைக்கப் படுவர் என்றும் கூறினார்.

இந்நிலையில் ஏர்வாடி பள்ளி மாணவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கவனக் குறைவாக செயல்படுதல், மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மீதும் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories