தமிழகம் வந்த ரத யாத்திரை: செங்கோட்டை எல்லையில் உற்சாக வரவேற்பு

Published:

rama rajya rath yatra - 2026

செங்கோட்டை: அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கக் கோரும் விழிப்புணர்வு ரத யாத்திரையை தனியார் அமைப்பு ஒன்று நடத்தி வருகிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து ஆன்மிக அமைப்புகள் ஆதரவில் இந்த ரத யாத்திரை சிவராத்திரியன்று  அயோத்தியில் துவங்கி, 41 நாட்கள் பயணித்து ராம நவமி அன்று ராமேஸ்வரத்தில் செல்வதாக ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது.

இந்த ரத யாத்திரை 5 மாநிலங்கள் வழியே கேரளா வந்து இன்று காலை 9 மணி அளவில் தமிழகத்தின் எல்லையான செங்கோட்டை, புளியரை கோட்டைவாசல் வழியே வந்தது. தமிழகத்திற்குள் வந்த ரதத்துக்கு அப்பகுதியில் உள்ளோர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

நெல்லை மாவட்டம், கோட்டை வாசல் பகுதிக்கு வந்த ரதத்தை வரவேற்க, இந்து இயக்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர்.

இந்த யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இஸ்லாமிய, திராவிட இயக்கங்கள் அறிவித்ததால், நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப் பட்டது. இதனால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

ரத யாத்திரை வருவதையொட்டி செங்கோட்டையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img