December 5, 2025, 5:12 PM
27.9 C
Chennai

வைகோ தொண்டர்களின் காமெடி கலாட்டா!: சொந்த கட்சிக்காரர்களையே நையப் புடைத்த நாயகர்கள்!

vaiko - 2025

சென்னை எழும்பூரில் மதிமுக., தலைமை அலுவலகம் அருகே அக்கட்சித் தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் என நினைத்து சிலரை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

மதிமுக.,வின் மாநில மாணவர் அணிக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. அப்போது மூலக்கொத்தளத்தில் ஆதி திராவிடர் குடியிருப்பு அமைய எதிர்ப்பு தெரிவிக்கும் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோவை கண்டித்து ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தாயகத்தை முற்றுகையிட புறப்பட்டனர்.

ஆல்பர்ட் திரை அரங்கம் அருகே வந்த போது அவர்களை போலீசார் தடுத்ததால் அங்கு சிறிது நேரம் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மதிமுக., மாணவர் அணிக் கூட்டம் நடைபெற்ற போது கண்ணதாசன் நகரைச் சேர்ந்த சிலர் ஆட்டோவில் சென்றனர். அப்போது அவர்களை மறித்த தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட வந்துள்ளீர்களா? எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் வந்த ஆட்டோவின் கண்ணாடி நொறுக்கப்பட்டது. அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதன் பின்னர், அந்தப் பகுதிக்கு வந்த போலீஸார், காயம்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்கப்பட்டவர்களும் மதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் என்று விசாரணையில் தெரிய வந்ததாக  போலீசார் கூறினர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ, மூலக்கொத்தளம் மயானத்தை அரசு எந்த விதத்திலும் தகர்க்க விடமாட்டோம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories