போக்குவரத்துத் தொழிலாளருக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதே! : நீதிபதி அறிக்கை!

tamil nadu bus strike - 2026

சென்னை: போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதுதான் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அறிக்கை தாக்கல் செய்தார்.

2.57 காரணி ஊதிய உயர்வு கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஜனவரியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், 2.44 காரணி ஊதிய உயர்வே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த தொமுச உள்ளிட்டதொழிற்சங்கங்கள் சில வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினன்.

ஆனால் இந்த வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புமாறு உத்தரவிட்டது. மேலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு தரப்பிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை கண்காணித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமித்தது. இதையடுத்து, நீதியரசர் பத்மநாபன் முன்னிலையில், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்நிலையில், பத்மநாபன் தனது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் அளித்தார்.

அந்த அறிக்கையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதுதான் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பத்மநாபன் அறிக்கை நகலை மனுதாரர், தொழிற்சங்கங்கள், அரசுத் தரப்பு அனைவரும் பதிவுத்துறை மூலம் பெற்றுக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories