போக்குவரத்துத் தொழிலாளருக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதே! : நீதிபதி அறிக்கை!

tamil nadu bus strike - 2026

சென்னை: போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதுதான் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அறிக்கை தாக்கல் செய்தார்.

2.57 காரணி ஊதிய உயர்வு கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஜனவரியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், 2.44 காரணி ஊதிய உயர்வே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த தொமுச உள்ளிட்டதொழிற்சங்கங்கள் சில வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினன்.

ஆனால் இந்த வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புமாறு உத்தரவிட்டது. மேலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு தரப்பிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை கண்காணித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமித்தது. இதையடுத்து, நீதியரசர் பத்மநாபன் முன்னிலையில், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்நிலையில், பத்மநாபன் தனது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் அளித்தார்.

அந்த அறிக்கையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதுதான் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பத்மநாபன் அறிக்கை நகலை மனுதாரர், தொழிற்சங்கங்கள், அரசுத் தரப்பு அனைவரும் பதிவுத்துறை மூலம் பெற்றுக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories