‘உயிருக்கு உயிராய்’ காதலித்து, செல்போன் சந்தேகத்தில் காதலி உயிரை எடுக்க பிளேடு போட்ட ‘காதலன்’ கைது!

blade prakash - 2026

சென்னை: சென்னை, பல்லாவரத்தில், உயிருக்கு உயிராய் காதலித்த தனது காதலியை சந்தேகப்பட்ட காதலன் ஒருவர், அப்பெண் மீது பிளேடால் கீறி உயிரெடுக்க முற்பட்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், சென்னை விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றுகிறார். இவருக்கும் திருச்சியைச் சேர்ந்த இந்து என்கிற பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் பழகி வந்த நிலையீல், பிரகாஷ் இந்துவைக் காதலித்துள்ளார். இந்நிலையில், திடீரென இந்து மீது பிரகாஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்துவிடம் கேள்விகள் கேட்டுக் குடைந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்லாவரத்தில் உள்ள பூங்காவுக்கு வருமாறு இந்துவை அழைத்துள்ளார் பிரகாஷ். அதன்படி இந்துவும் அங்கு வந்துள்ளார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென இந்துவிடமிருந்த செல்போனைப் பிடுங்கி, அவர் யாரிடம் எல்லாம் பேசியுள்ளார் என்று இன்கமிங்க், அவுட்கோயிங் கால்களை ‘செக்’ செய்துள்ளார் பிரகாஷ்.

இதனால் கோபம் அடைந்த இந்து, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, ஆத்திரமடைந்த பிரகாஷ், தன் கையில் வைத்திருந்த பிளேடால் இந்துவை கண்டபடி கிழித்துள்ளார். இதனால் ரத்தம் பெருக்கெடுக்க, இந்து அலறித்துடித்துள்ளார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்துவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், உடனடியாக இந்துவை மீட்டு, அருகில் இருந்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்துவின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வருவதைப் பார்த்ததுமே ஓடத் தொடங்கி தலைமறைவானார் பிரகாஷ். அவர் குறித்து போலீஸாரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

தப்பி ஓடிய பிரகாஷை பல்லாவரம் போலீஸார் தேடிக் கண்டுபிடித்து கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், இந்து மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை பிளேடால் கிழித்ததாகத் தெரிவித்துள்ளார் பிரகாஷ்.

இதுகுறித்துக் கூறிய போலீஸார், “பிரகாஷும் இந்துவும் காதலித்துள்ளனர். இந்து மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை பிளேடால் கிழித்ததாக பிரகாஷ் கூறியுள்ளார். இந்துவை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக பிரகாஷை கைது செய்துள்ளோம். நல்லவேளையாக, இந்து அலறிய போது அங்கே திரண்ட பொதுமக்களால் இந்து காப்பாற்றப்பட்டுவிட்டார். இல்லையென்றால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்” என்று கூறினர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories