காவிரி பிரச்னைக்காக… அதிமுக., உண்ணாவிரத தேதி ஏப்.3க்கு மாற்றம்!

Published:

edappadi panneer e1521029872883 - 2026

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பதற்கான திட்டத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார ‘கெடு’   முடிந்த நிலையில், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், இதற்கு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாகவும் ஆளும் அதிமுக., சார்பில் ஏப்.2ம் தேதி நடத்தப் படுவதாக அறிவிக்கப் பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏப்.3ம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது.

மதுரையில் அதிமுக., திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக தரப்பிலான உண்ணாவிரத போராட்ட தேதி மாற்றப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகம், புதுச்சேரியில் அதிமுக சார்பில் ஏப்ரல் 3ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img