December 5, 2025, 8:47 PM
26.7 C
Chennai

மதுரையில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நிர்வாகி தீக்குளிப்பு!

vaiko madurai mdmk person setfire himself - 2025

மதுரையில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நிர்வாகி ஒருவர் திடீரென தீக்குளித்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் இருந்து கம்பத்தை நோக்கி நடைப் பயணம் செல்ல திட்டமிட்டு இன்று மதிமுக., சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த நடைப் பயணத்தை மதுரையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்த நடைப் பயண துவக்க நிகழ்ச்சியின் போது, விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி திடீரென பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். உடனே அருகில் இருந்தோர் ரவியை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீக்குளித்த ரவி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தமது கட்சி நிர்வாகி தீக்குளித்த தகவல் அறிந்து வைகோ அழுதார். பின்னர், வைகோ நியூட்ரினோவுக்கு எதிராக நடைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

தொடர்ந்து பொன்மேனி என்ற இடத்தின் அருகே நடைப்பயணத்தில் வந்தவர்கள் சென்ற போது, வைகோவின் நடைப் பயணத்தால் என்ன பயன் விளையும் என அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மதிமுக தொண்டர்கள் அவரை அடித்து விரட்டினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

vaiko flag - 2025

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் வைகோவை கட்டித் தழுவி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இருவரும் சற்று நேரம் அளவளாவினர். தொடர்ந்து, மூவேந்தர் கொடி ஒன்று இந்த நிகழ்ச்சியில் அசைக்கப் பட்டு, நடைப்பயணம் தொடங்கப்பட்டது.

இதுதான் தமிழகத்தின் மூவேந்தர்களின் முதற்கொடி, தமிழ்க் கொடி என்று சிலர் சிலாகித்துப் பாராட்டினர். இன்று மதுரையில் வைகோ அறிமுகப்படுத்தி  இருப்பதுதான் தமிழ் மரபுக் கொடி. என்றார் பெ. மணியரசன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories