மதுரையில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நிர்வாகி தீக்குளிப்பு!

vaiko madurai mdmk person setfire himself - 2026

மதுரையில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நிர்வாகி ஒருவர் திடீரென தீக்குளித்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் இருந்து கம்பத்தை நோக்கி நடைப் பயணம் செல்ல திட்டமிட்டு இன்று மதிமுக., சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த நடைப் பயணத்தை மதுரையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்த நடைப் பயண துவக்க நிகழ்ச்சியின் போது, விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி திடீரென பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். உடனே அருகில் இருந்தோர் ரவியை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீக்குளித்த ரவி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தமது கட்சி நிர்வாகி தீக்குளித்த தகவல் அறிந்து வைகோ அழுதார். பின்னர், வைகோ நியூட்ரினோவுக்கு எதிராக நடைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

தொடர்ந்து பொன்மேனி என்ற இடத்தின் அருகே நடைப்பயணத்தில் வந்தவர்கள் சென்ற போது, வைகோவின் நடைப் பயணத்தால் என்ன பயன் விளையும் என அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மதிமுக தொண்டர்கள் அவரை அடித்து விரட்டினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

vaiko flag - 2026

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் வைகோவை கட்டித் தழுவி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இருவரும் சற்று நேரம் அளவளாவினர். தொடர்ந்து, மூவேந்தர் கொடி ஒன்று இந்த நிகழ்ச்சியில் அசைக்கப் பட்டு, நடைப்பயணம் தொடங்கப்பட்டது.

இதுதான் தமிழகத்தின் மூவேந்தர்களின் முதற்கொடி, தமிழ்க் கொடி என்று சிலர் சிலாகித்துப் பாராட்டினர். இன்று மதுரையில் வைகோ அறிமுகப்படுத்தி  இருப்பதுதான் தமிழ் மரபுக் கொடி. என்றார் பெ. மணியரசன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories