February 22, 2026, 2:10 AM
25.6 C
Chennai

மதுரையில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நிர்வாகி தீக்குளிப்பு!

vaiko madurai mdmk person setfire himself - 2026

மதுரையில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நிர்வாகி ஒருவர் திடீரென தீக்குளித்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் இருந்து கம்பத்தை நோக்கி நடைப் பயணம் செல்ல திட்டமிட்டு இன்று மதிமுக., சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த நடைப் பயணத்தை மதுரையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்த நடைப் பயண துவக்க நிகழ்ச்சியின் போது, விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி திடீரென பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். உடனே அருகில் இருந்தோர் ரவியை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீக்குளித்த ரவி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தமது கட்சி நிர்வாகி தீக்குளித்த தகவல் அறிந்து வைகோ அழுதார். பின்னர், வைகோ நியூட்ரினோவுக்கு எதிராக நடைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

தொடர்ந்து பொன்மேனி என்ற இடத்தின் அருகே நடைப்பயணத்தில் வந்தவர்கள் சென்ற போது, வைகோவின் நடைப் பயணத்தால் என்ன பயன் விளையும் என அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மதிமுக தொண்டர்கள் அவரை அடித்து விரட்டினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

vaiko flag - 2026

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் வைகோவை கட்டித் தழுவி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இருவரும் சற்று நேரம் அளவளாவினர். தொடர்ந்து, மூவேந்தர் கொடி ஒன்று இந்த நிகழ்ச்சியில் அசைக்கப் பட்டு, நடைப்பயணம் தொடங்கப்பட்டது.

இதுதான் தமிழகத்தின் மூவேந்தர்களின் முதற்கொடி, தமிழ்க் கொடி என்று சிலர் சிலாகித்துப் பாராட்டினர். இன்று மதுரையில் வைகோ அறிமுகப்படுத்தி  இருப்பதுதான் தமிழ் மரபுக் கொடி. என்றார் பெ. மணியரசன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories