பெரிய கடற்கரை; இரவு முழுக்க கண்காணிப்பு

Published:

IMG 20180331 WA0043 - 2026

சென்னை மெரினா கடற்கரையில் விடிய விடிய போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து நேற்று முன்தினம் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் பலத்த பாதுகாப்பை மீறி சில இளைஞர்களும், பெண்களும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தடையை மீறி நடக்கும் போராட்டத்தை தடுக்கும் வகையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் 2வது நாளாக நேற்று இரவு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இன்று அதிகாலையில் கடற்கரைக்கு  வந்தவர்களை உள்ளே அனுமதிக்காததால், சாலையை ஒட்டிய நடைபாதையிலேயே அவர்கள் நடைபயிற்சியை மேற்கொண்டனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img