கல்வீச்சில் படுகாயம் அடைந்த சென்னை கூடுதல் துணை ஆணையர்!

IMG 20180331 WA0043 e1522762143299 - 2026

காவிரி விவகாரத்தில் இன்று நடைபெற்று வரும் போராட்டங்களில், வன்முறை வெடித்தது. பல இடங்களில் கல் வீச்சும் நடைபெற்றது. இந்தக் கல்வீச்சு சம்பவங்களில், சென்னையில், கூடுதல் துணை ஆணையர் குமார் காயம் அடைந்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் போராட்டத்தின் போது கல்வீச்சில் கூடுதல் ஆணையர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற எதிர்க் கட்சியினரை இரண்டு இடங்களில் தடுப்புகளை அமைத்து போலீசார் தடுக்க முயன்றனர். இரண்டாவது முறையாக சென்னை பல்கலைக்கழகத்துக்கு சற்று முன்னர் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுக்க முயன்ற போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது.  போலீஸார் அமைத்த தடுப்புகளை அகற்றி முன்னேறிய போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர்.

இதில் மதுவிலக்கு அமலாக்கத்துறை கூடுதல் துணை ஆணையரான குமாரும் ஆயுதப் படைக் காவலரான முருகனும் படுகாயம் அடைந்தனர்.

சென்னை சேப்பாக்கம் பகுதியில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் கூடுதல் துணை ஆணையர் குமாருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. குமாரும் முருகனும் உடனடியாக,  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். அங்கு இருவருக்கும் காயத்துக்கான உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை கூடுதல் துணை ஆணையராகப் பணி புரியும் ஆர்.குமார், சிறந்த பணி செய்தமைக்கான அண்மையில் குடியரசூத் தலைவர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories