December 5, 2025, 9:50 PM
26.6 C
Chennai

கல்வீச்சில் படுகாயம் அடைந்த சென்னை கூடுதல் துணை ஆணையர்!

IMG 20180331 WA0043 e1522762143299 - 2025

காவிரி விவகாரத்தில் இன்று நடைபெற்று வரும் போராட்டங்களில், வன்முறை வெடித்தது. பல இடங்களில் கல் வீச்சும் நடைபெற்றது. இந்தக் கல்வீச்சு சம்பவங்களில், சென்னையில், கூடுதல் துணை ஆணையர் குமார் காயம் அடைந்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் போராட்டத்தின் போது கல்வீச்சில் கூடுதல் ஆணையர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற எதிர்க் கட்சியினரை இரண்டு இடங்களில் தடுப்புகளை அமைத்து போலீசார் தடுக்க முயன்றனர். இரண்டாவது முறையாக சென்னை பல்கலைக்கழகத்துக்கு சற்று முன்னர் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுக்க முயன்ற போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது.  போலீஸார் அமைத்த தடுப்புகளை அகற்றி முன்னேறிய போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர்.

இதில் மதுவிலக்கு அமலாக்கத்துறை கூடுதல் துணை ஆணையரான குமாரும் ஆயுதப் படைக் காவலரான முருகனும் படுகாயம் அடைந்தனர்.

சென்னை சேப்பாக்கம் பகுதியில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் கூடுதல் துணை ஆணையர் குமாருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. குமாரும் முருகனும் உடனடியாக,  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். அங்கு இருவருக்கும் காயத்துக்கான உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை கூடுதல் துணை ஆணையராகப் பணி புரியும் ஆர்.குமார், சிறந்த பணி செய்தமைக்கான அண்மையில் குடியரசூத் தலைவர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories