‘கள்ளத் தோணி’ புகழ் வைகோ கோழைத்தனம் பற்றி பேச தகுதியற்றவர்!

vaiko modi - 2026

கள்ளத்தோணி புகழ் வைகோ கோழை, வீரம் என்று பேசுவதற்கே தகுதியற்றவர். பிரதமரைக் கோழை என்று கூறிய மதிமுக பொதுச் செயலர் வைகோவை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கருப்புக் கொடி போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் என்றால், பிரதமர் மோடி தமிழகத்துக்குள் சாலை மார்க்கமாகவே வந்து செல்லலாம். தமிழக சாலையில் பயணிக்கக்கூட முடியாத கோழை மோடி… என்று கூறியிருந்தார். மேலும், நாளை தமிழகத்துக்கு வரும் மோடி, தைரியம் இருந்தால் சாலை வழியாக வரட்டும்’ என மோடிக்கு வைகோ சவால் விடுத்தார்.

ஆனால், பிரதமர் பயணம் குறித்து கடந்த ஏப்.6ம் தேதி பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் மூலம் பத்திரிகைகளுக்கு அனுப்பப் பட்ட மோடியின் பயணக் குறிப்பில் அவரது பயணத் திட்டத்தில், சாலைவழியாக பயணம் மேற்கொள்ளும் தகவலை பை ரோட் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

modi in chennai plan - 2026

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில், ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறும் ராணுவத் தளவாட கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். தமிழகத்தில் காவிரி தொடர்பான பிரச்னைகள் வலுத்து வரும் நிலையில், மோடி தமிழகம் வரும்போது அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

ALSO READ:  ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த  வைகோ “தமிழகத்தில் காவிரிக்காகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், நாளை சென்னை வரவிருக்கும் மோடி துணிவிருந்தால் சாலை வழியாக வரட்டும். தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.ஐ.டி வளாகத்துக்குள் நேராக நுழைந்து, மோடிக்காக ஐ.ஐ.டி சுவரை இடித்துக் கட்டப்பட்ட சாலை வழியாகச் சென்று கண்காட்சியில் பங்கேற்க இருக்கிறார். எதற்கு இவ்வளவு பாதுகாப்பு. கறுப்புக்கொடிகளைப் பார்த்து பிரதமர் ஏன் பயப்பட வேண்டும். கொடிகளில் குண்டு வைத்து விடுவோம் எனப் பயப்படுகிறாரா… இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியான பிரதமரை நான் பார்த்ததே இல்லை. உங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்தால், நீங்கள் சாலை வழியாக வாருங்கள்” என ஆவேசமாகக் கூறினார்.

வைகோ-வின் இந்தக் கருத்துக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே, அதைக் கோழை, பயந்தாங்கொள்ளி எனக் கீழ்த்தரமாக விமர்சித்த வைகோ-வை வன்மையாகக் கண்டிக்கிறோம், இதைச் சொல்லும் வைகோ, யாருக்குப் பயந்து கள்ளத்தோணியில் இலங்கை சென்றார். பிரதமர், முன்னறிவிப்பு இல்லாமல் தீவிரவாத நாடான பாக்கிஸ்தானுக்கே தைரியமாகச் சென்றவர்” எனப் பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories