சென்னை: கல்லூரி மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்குமாறு, பேராசிரியை நிர்மலா தேவி கூறிய விவகாரத்தில் சிபிஐ., விசாரணை தேவை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், எந்த மேலிடத்திற்காக இப்படிபட்ட ஈனச் செயலில் நிர்மலா தேவி ஈடுபட முயன்றார் என்பதைக் கண்டறிந்து, அந்த குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்ற வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
அவரது டிவிட்டர் பதிவுகள்:
கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த “மேலிடத்திற்கு” இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) April 16, 2018
கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) April 16, 2018