April 27, 2025, 11:53 AM
32.9 C
Chennai

அனுமதி இல்லாமல் ‘தாத்தா’ தட்டினாலும் தப்பு: பொங்கிய பெண் நிருபர் கன்னத்தைக் கழுவிக் கழுவித் துடைத்தாலும் அடங்கவில்லை!

சென்னை: ஆளுநர் பெண் நிருபரின் கன்னத்தில் செல்லமாகத் தட்டியதால், கோபமடைந்த பெண் நிருபர் பல முறை கன்னத்தைக் கழுவிக் கழுவித் துடைத்தாராம்.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்துகிறார் என்ற புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தன் மீதான சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுக்கும் விதமாக ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, ஆளுநரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவரைத் துளைத்து எடுத்தனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பு முடியும் போது பெண் நிருபர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வி ஒன்றை எழுப்பினாராம். அதற்கு நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறிய ஆளுநர் பெண் நிருபரின் கன்னத்தில் லேசாக தட்டினாராம்.

இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் நிருபர் தனது ட்விட்டர் பக்கத்தில், “செய்தியாளர் சந்திப்பு முடியும் தருவாயில் ஆளுநரிடம் நான் ஒரு கேள்வி எழுப்பினேன். ஆனால், என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்காமல் ஒரு அதிகாரி என்ற தோரணையில் என் கன்னத்தில் தட்டி அமைதிப்படுத்தினார். என்னுடைய அனுமதி இல்லாமல், என்னுடையா தாத்தா போன்ற வயதுடையவர் என கூறிக் கொண்டு கன்னத்தில் தட்டுவது அவருக்கு சாதாரணமாக இருக்கலாம், ஆனால் என்னை பொறுத்தவரை அது தவறு” என்று பகிர்ந்துள்ளார்.

ALSO READ:  IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

பேராசிரியை நிர்மலா தேவி தொலைபேசியில் கல்லூரி மாணவிகளுடன் தொலைபேசியில் பேசிய விவகாரத்தில் ஆளுநர் பெயரை போகிற போக்கில் அவர் பெயரைக் குறிப்பிடுவதால், ஆளுநருக்கு இதில் தொடர்புள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்நிலையில் அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஒரு பெண் நிருபரும் அது தொடர்பாக கேள்வி எழுப்பினார். ஆனால் குற்றச் சாட்டுகளை மறுத்த ஆளுநர், செய்தியாளார் சந்திப்பை முடித்துவிட்டு எழுந்த நிலையில், மீண்டும் அந்தப் பெண் நிருபர் கேட்டபோது, நீங்கள் என் பேத்தி போல் என்று சொல்லிவிட்டு கன்னத்தில் லேசாகத் தட்டினாராம். இதைக் குறிப்பிட்டு தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட அந்தப் பெண் நிருபரால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபரின் அதுவும் ஒரு பெண்ணின் கன்னத்தை அவரது அனுமதி இல்லாமல் தொடுவது முறையான நடத்தை அல்ல. என்னுடைய முகத்தை நான் பல முறை கழுவி விட்டேன். இருந்தாலும் என்னால் அதில் இருந்து மீள முடியவில்லை. அதனால் கோபமும் ஆத்திரமும் அடைந்தேன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உங்களுக்கு வேண்டுமானால் இது ஒரு தாத்தாவைப் போன்ற அணுகுமுறையாக இருக்கலாம். என்னைப் பொருத்தவரை அது தவறு” என்று அந்த நிருபர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

ஆளுநர் இதற்கு மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கங்களைக் கொடுக்க வேண்டிய நிலை வரலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Entertainment News

Popular Categories