நிர்மலா தேவியிடம் ஏப்.21ம் தேதி விசாரணை: கூடுதலாக பெண் அதிகாரிகள் நியமனம்

Professor Nirmala Devi sent to judicial custody - 2026

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிறையில் உள்ள அவரிடம் ஏப்ரல்.21ஆம் தேதி மாலை விசாரணை நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். மேலும், உடன் விசாரிக்க வசதியாக, கூடுதலாக பெண் விசாரணை அதிகாரி ஒருவரும் நியமிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

விசாரணை அதிகாரி சந்தானத்திற்கு உதவும் வகையில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை பேராசிரியர் கமலி மற்றும் வேளாண் பல்கலை., பேராசிரியர் தியாகேஸ்வரி ஆகியோர் விசாரணை குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பாக பொது மக்கள், மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தரலாம் என ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்தார். மேலும், தகவல் தெரிந்தவர்கள் 21, 25, 26 ஆகிய தேதிகளில் மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நேரில் ஆஜராகி, தங்களுக்கு தெரிந்தவற்றை எழுத்துபூர்வமாக அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் குழு இன்று விசாரணையைத் தொடங்கியது.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த வற்புறுத்திய ஆடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நியமித்திருந்தார். இதை அடுத்து இன்று முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சந்தானம் குழு, இன்று மதுரை வந்தது. நிர்மலா தேவியின் ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்வதுடன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளை தனித் தனியாகயும் விசாரணை நடத்துகிறது. நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினாலும், பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்பு குறித்து விரிவாக ஆராயப்படும் என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி, நேற்றே விசாரணையை தொடங்கி விட்டது. விசாரணை அதிகாரியும் சி.பி.சி.ஐ.டி. எஸ்பியுமான ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் ஆகியோரிடம், நிர்மலா தேவி சம்பந்தப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த ஆவணங்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டன. அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலாதேவி வீடு மற்றும் கல்லூரி நிர்வாகம், கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

இன்று மதுரை காமராஜர் பல்கலை நிர்வாகத்திடம் சிபிசிஐடி அதிகாரிகள் 5 பேர் குழு விசாரணை நடத்தியது. நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரித் தலைவர் உள்ளிட்ட 4 பேரிடமும் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப் பட்டது.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். எனவே இந்த விவகாரத்தில் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அரசியல் மட்டத்தில் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories