நிர்மலா தேவியிடம் ஏப்.21ம் தேதி விசாரணை: கூடுதலாக பெண் அதிகாரிகள் நியமனம்

Professor Nirmala Devi sent to judicial custody - 2026

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிறையில் உள்ள அவரிடம் ஏப்ரல்.21ஆம் தேதி மாலை விசாரணை நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். மேலும், உடன் விசாரிக்க வசதியாக, கூடுதலாக பெண் விசாரணை அதிகாரி ஒருவரும் நியமிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

விசாரணை அதிகாரி சந்தானத்திற்கு உதவும் வகையில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை பேராசிரியர் கமலி மற்றும் வேளாண் பல்கலை., பேராசிரியர் தியாகேஸ்வரி ஆகியோர் விசாரணை குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பாக பொது மக்கள், மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தரலாம் என ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்தார். மேலும், தகவல் தெரிந்தவர்கள் 21, 25, 26 ஆகிய தேதிகளில் மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நேரில் ஆஜராகி, தங்களுக்கு தெரிந்தவற்றை எழுத்துபூர்வமாக அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் குழு இன்று விசாரணையைத் தொடங்கியது.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த வற்புறுத்திய ஆடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நியமித்திருந்தார். இதை அடுத்து இன்று முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சந்தானம் குழு, இன்று மதுரை வந்தது. நிர்மலா தேவியின் ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்வதுடன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளை தனித் தனியாகயும் விசாரணை நடத்துகிறது. நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினாலும், பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்பு குறித்து விரிவாக ஆராயப்படும் என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி, நேற்றே விசாரணையை தொடங்கி விட்டது. விசாரணை அதிகாரியும் சி.பி.சி.ஐ.டி. எஸ்பியுமான ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் ஆகியோரிடம், நிர்மலா தேவி சம்பந்தப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த ஆவணங்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டன. அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலாதேவி வீடு மற்றும் கல்லூரி நிர்வாகம், கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

இன்று மதுரை காமராஜர் பல்கலை நிர்வாகத்திடம் சிபிசிஐடி அதிகாரிகள் 5 பேர் குழு விசாரணை நடத்தியது. நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரித் தலைவர் உள்ளிட்ட 4 பேரிடமும் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப் பட்டது.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். எனவே இந்த விவகாரத்தில் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அரசியல் மட்டத்தில் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories