நிர்மலா தேவியிடம் ஏப்.21ம் தேதி விசாரணை: கூடுதலாக பெண் அதிகாரிகள் நியமனம்

Professor Nirmala Devi sent to judicial custody - 2026

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிறையில் உள்ள அவரிடம் ஏப்ரல்.21ஆம் தேதி மாலை விசாரணை நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். மேலும், உடன் விசாரிக்க வசதியாக, கூடுதலாக பெண் விசாரணை அதிகாரி ஒருவரும் நியமிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

விசாரணை அதிகாரி சந்தானத்திற்கு உதவும் வகையில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை பேராசிரியர் கமலி மற்றும் வேளாண் பல்கலை., பேராசிரியர் தியாகேஸ்வரி ஆகியோர் விசாரணை குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பாக பொது மக்கள், மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தரலாம் என ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்தார். மேலும், தகவல் தெரிந்தவர்கள் 21, 25, 26 ஆகிய தேதிகளில் மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நேரில் ஆஜராகி, தங்களுக்கு தெரிந்தவற்றை எழுத்துபூர்வமாக அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் குழு இன்று விசாரணையைத் தொடங்கியது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த வற்புறுத்திய ஆடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நியமித்திருந்தார். இதை அடுத்து இன்று முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சந்தானம் குழு, இன்று மதுரை வந்தது. நிர்மலா தேவியின் ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்வதுடன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளை தனித் தனியாகயும் விசாரணை நடத்துகிறது. நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினாலும், பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்பு குறித்து விரிவாக ஆராயப்படும் என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி, நேற்றே விசாரணையை தொடங்கி விட்டது. விசாரணை அதிகாரியும் சி.பி.சி.ஐ.டி. எஸ்பியுமான ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் ஆகியோரிடம், நிர்மலா தேவி சம்பந்தப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த ஆவணங்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டன. அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலாதேவி வீடு மற்றும் கல்லூரி நிர்வாகம், கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இன்று மதுரை காமராஜர் பல்கலை நிர்வாகத்திடம் சிபிசிஐடி அதிகாரிகள் 5 பேர் குழு விசாரணை நடத்தியது. நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரித் தலைவர் உள்ளிட்ட 4 பேரிடமும் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப் பட்டது.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். எனவே இந்த விவகாரத்தில் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அரசியல் மட்டத்தில் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories