January 24, 2025, 6:18 AM
23.5 C
Chennai

கண்டத்தில் தப்பியது தமிழக அரசு: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு தள்ளுபடி செய்யப் படுவதாக உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு கூறியது.

மேலும், சட்டமன்ற அவைத் தலைவர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்தத் தீர்ப்பைக் கேட்பதற்காக, நீதிமன்ற வளாகமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தகுதி குறித்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதாக அறிவித்திருந்தது.

1. ஓ பன்னீர் செல்வம் 2. மனோகரன் 3. செம்மலை 4. ஆறு குட்டி 5. ஆர் நட்ராஜ் 6. சண்முகநாதன் 7. கே.பாண்டியராஜன் 8. சின்னராஜ் 9. சரவணன் 10. மாணிக்கம் 11. மனோரஞ்சிதம் – இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கக் கோரும் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, திமுக., சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஆஜரானார்.

ALSO READ:  குறைந்த விலை, அதிக கையூட்டு; கரும்பு விவசாயிகள் துயர் துடைக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்!

பன்னீர்செல்வம் தனியாகப் பிரிந்த பின்னர், எடப்பாடி முதல்வராகப் பொறுப்பேற்றார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்; 18-ஆம் தேதி அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர்.இந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால், அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  பசும்பாலுக்கு பணம் உயர்த்திக் கோரி ஆர்ப்பாட்டம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng T20: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா இங்கிலாந்து முதல் டி-20 ஆட்டம்- கொல்கொத்தா-22 ஜனவரி 2025

பஞ்சாங்கம் ஜன.23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜன.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...